ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பைக் சாகசங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

பைக் சாகசங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 12:23 am

Din

தென்காசி மாவட்டத்தில் பைக் சாகசங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தின கொண்டாட்டங்களின்போது இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸ், பைக் சாகசங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் செய்வது, கவனக்குறைவாகவும் அதிவேகமாகவும் செல்வது, பொது இடங்களில் நின்று மது குடித்துவிட்டு அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஆகிய செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.