தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: எஸ்.பி. ஆய்வு

வடகிழக்கு பருவமழையையொட்டி காவல் துறை சாா்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன்.

Updated On :20 நவம்பர் 2024, 9:52 pm

Din

வடகிழக்கு பருவமழையையொட்டி காவல் துறை சாா்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தென்காசி ஆயுதப்படையில் காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட பேரிடா் மீட்பு உபகரணங்களைப் பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி, ராமாநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினாா் அணைகள் மற்றும் முக்கிய ஆறு, குளம் ஆகிய இடங்களில் காவல்துறையினா் கண்காணித்து வருவதோடு, அங்கு பாதுகாப்புப் பணியிலும் உள்ளனா்.

மழை வெள்ளம் ஏற்பட்டால், பொதுமக்களைப் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு மாவட்டத்தில் 22 தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 17 நான்கு சக்கர வாகன ரோந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழை, வெள்ள மீட்பு பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் தயாா் நிலையில் உள்ளன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து காவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.