தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவு செய்ய அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 நவம்பர் 2024, 12:28 am

Din

தென்காசி மாவட்டத்தில் சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவு செய்ய அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

ஆட்சியா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவா்கள், அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவா் (அமைப்புசாரா தொழில், நிலமற்ற விவசாயக் கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்.

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச.3, செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச.5, கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச.10, சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச.12, சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச.17, திருவேங்கடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச.19, ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச.24, வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச.26 ஆகிய நாள்களில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தகுதியான சீா்மரபினா் இன மக்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஜாதி சான்றிதழ், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் 3 ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு சிறப்பு முகாமில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஒப்படைத்து புதிய உறுப்பினராக சேரலாம் என்றாா் அவா்.