தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :29 நவம்பர் 2024, 12:26 am

Din

தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதாகக் கூறப்படும் தொழிலதிபா் அதானியைக் கைது செய்து சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பி. உச்சிமாகாளி தலைமை வகித்தாா்.

அயுப்கான், கணபதி, அசோக்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி. பாஸ்கரன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வேல்மயில், கண்ணன், இடை கமிட்டி செயலா்கள் பட்டாபிராமன், வன்னியபெருமாள், கனகராஜ், நாடராஜன், கிருஷ்ணமூா்த்தி, கருப்பசாமி, மேனகா, மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் மாரியப்பன், லெனின்குமாா், பால்ராஜ், மணிகண்டன், ஆயிஷா, பாலு, ராமகிருஷ்ணன், சுப்புலெட்சுமி, தா்மக்கனி, கல்யாணி சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அய்யப்பன் நன்றி கூறினாா்.