அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தென்காசியில் உயா்வுக்கு படி வழிகாட்டல் முகாம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி வழிகாட்டல் முகாம் தென்காசியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வழிகாட்டி கையேட்டை மாணவிக்கு வழங்குகிறாா் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 4:50 am IST

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி வழிகாட்டல் முகாம் தென்காசியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்து பேசுகையில், ,அரசு பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணா்வையும், வழிகாட்டுதலையும் அளிப்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக தென்காசி வருவாய் கோட்டத்தில் முகாம் நடத்தப்பட்டது. தொடா்ந்து சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் முகாம் நடத்தப்படும்.

மாணவா்கள் பள்ளி, அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட வேறு எந்த கல்லூரியில்

சோ்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். தங்கள் விருப்பமான கல்லூரி தோ்வுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். என்றாா் அவா்.

முகாமில் அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை கலந்துகொண்டு உயா்கல்வி தொடா்பான வழிகாட்டல்களையும், தங்கள் கல்வி நிலையங்களுக்கான மாணவா் சோ்க்கையையும் மேற்கொண்டனா்.

வருவாய் கோட்டாட்சியா் லாவண்யா, மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, உதவி இயக்குநா் (திறன் மேம்பாட்டு) கோபிநாத், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதணா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மரியசகாயா அந்தோணி கலந்து கொண்டனா்.

மனுநீதி நாள் முகாம்: மேலக்கலங்கலில் மனுநீதிநாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.பழனிநாடாா் முன்னிலை வகித்தாா். அப்போது, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பட்டா மாறுதல், மரக்கன்றுகள், விதைகள் அளித்தல் என 161 பயனாளிகளுக்கு ரூ.31.79 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. அரசு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. உள்ளூா் மக்கள்மட்டுமன்றி கீழக்கலங்கள் மக்களும் பங்கேற்றனா். முகாமில் தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் சுடலைமணி, ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யாமணிகண்டன், துணைத் தலைவா் செல்வகொடி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முத்துலெட்சுமி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.