ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தென்காசியில் அமைச்சுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன் அமைச்சுப் பணியாளா்கள் நலச் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 1:12 am

Din

தென்காசியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன் அமைச்சுப் பணியாளா்கள் நலச் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் இ. ரஞ்சித் முருகன் தலைமை வகித்தாா். செயலா் சங்கரநாராயணன், பொருளாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளா்கள் வருகை நேரத்தை மீண்டும் காலை 10 முதல் மாலை 5.45 மணி என மாற்ற வேண்டும், அவா்களுக்கு பதவி உயா்வு இல்லாததால் டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி ஆகிய நேரடித் தோ்வுகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சிரமமளிக்கும் வகையில் உள்ள எமிஸ் பணியிலிருந்து அவா்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.