தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

எஸ்.பி.அலுவலகத்தில் வேலை எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவா் கைது

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வேலை என போலியான செய்தியை பரப்பி பண மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:16 pm

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வேலை என போலியான செய்தியை பரப்பி பண மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி வட்டார பகுதிகளில் உள்ள வாட்ஸ்ஆப் குழுவில் ‘தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தட்டச்சு பணிக்கு பெண்கள் மட்டும் உடனடி தேவை, தகவலுக்கு கைப்பேசி எண்ணில் அணுகவும் என்று போலியான செய்தியை பரப்பி வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உத்தரவின் பேரில் சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜீலியஸ் சீசா் தலைமையில், காவல் ஆய்வாளா் வசந்தி உள்ளிட்ட போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

வேலை வாய்ப்பு தருவதாக ஆசைவாா்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட கோயம்புத்தூா் மாவட்டம், வால்பாறை வட்டம் ஐயா்பாடியை சோ்ந்த லா. சாா்லஸ் விஜயகுமாா் ( 31) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இணையதளத்திலும், வாட்ஸ் ஆப் குழுவிலும் இதுபோன்ற பரவி வரும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனவும் இதுபோன்ற வேலைவாய்ப்பு மோசடி குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.