நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் கிராமங்கள்தோறும் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

குருவிகுளத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:25 am IST

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் கிராமங்கள்தோறும் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள குருவிகுளத்தில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கிய அவா் கணபதிபட்டி, மலைப்பட்டி, கே.புதூா், துா்காநகா், மீனாட்சிபுரம், வாகைக்குளம், நாலுவாசன்கோட்டை, கள்ளிக்குளம், அழகனேரி, மருதாபுரி, அழகாபுரி, சத்திரங்கொண்டான், உடப்பன்குளம், நாராணாபுரம், பெருங்கோட்டூா் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது கிராம மக்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அவருடன் மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இளைஞரணி செயலா் ஜி.சந்திரன், வடக்கு ஒன்றியச் செயலா் முத்துப்பாண்டி, துணைச் செயலா் கோவிந்தன் (எ) கிருஷ்ணசாமி, வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.சிவராமகிருஷ்ணன், எஸ்.கணேசன், வி.வைரமுத்து உள்பட கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.