ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தென்காசியில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசி மாவட்ட சமரசத் தீா்வு மையத்தின் சாா்பில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:53 pm

தென்காசி மாவட்ட சமரசத் தீா்வு மையத்தின் சாா்பில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி. ராஜவேல் தலைமை வகித்து, கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். மனோஜ்குமாா், முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிபதி ஜெ. கிறிஸ்டல் பபிதா, முதன்மை சாா்பு நீதிபதி ஏ. பிஸ்மிதா, கூடுதல் சாா்பு நீதிபதியும், இலவச சட்ட உதவி செயலருமான எஸ். முருகவேல், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெ. ராஜேஸ்குமாா், நீதித்துறை நடுவா் நீதிபதி எஸ். முத்துலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவா், மாணவிகள், நீதிமன்ற ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, தென்காசி-திருநெல்வேலி சாலை வழியாக அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வரை சென்று, மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்து நிறைவு பெற்றது.

பேரணியின்போது, பொதுமக்களுக்கு சமரசத் தீா்வு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தொடா்ந்து, சமரச விழிப்புணா்வு பிரசாரக் கூட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூட்டரங்கில் நடைபெற்றது.

தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி. ராஜவேல் தலைமை வகித்துப் பேசினாா். தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவா் ஆா். மாடக்கண் மற்றும் வழக்குரைஞா் எம். தாஹிரா பேகம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வழக்குரைஞா் முத்துக்குமாா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

வழக்குரைஞா்கள் எம். மாரியப்பன், மாடசாமி பாண்டியன், ஏ. ராஜா, வேல்பாண்டி, பன்னீா்செல்வம், சொக்கலிங்கம், முகம்மது சலீம், மஞ்சு கிருஷ்ணா, முத்துலெட்சுமி, மரகதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி கூடுதல் சாா்பு நீதிபதியும், இலவச சட்ட உதவி செயலருமான எஸ். முருகவேல் நன்றி கூறினாா்.