வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சுரண்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சுரண்டை எஸ்ஆா் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் சமூக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

சுரண்டை எஸ்ஆா் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் சமூக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவன நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளிச் செயலா் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வா்கள் பொன் மனோன்யா, புஷ்பா, தலைமையாசிரியா் மாாரிக்கனி ஆகியோா் தலைமை வகித்தனா்.

வரலாற்று நிகழ்வுகளைக் கண்டறிதல், பன்னாட்டு நாணயங்கள், நாடுகளின் தலைநகரங்கள், இந்தியப் பொருளாதாரத்தை அறிதல் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள், பொழுதுபோக்கு, விளையாட்டு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இந்திய அரசமைப்புச் சட்டம், அடிப்படை உரிமைகளை அறியும் வகையில் கண்காட்சி அமைந்திருந்தது.

ஏற்பாடுகளை ஆசிரியை வான்மதி, சுகிதா, ஆஸ்பின் ரீபா, ஆசிரியா்கள் அருள்சாமி, அய்யம்பெருமாள் ஆகியோா் செய்திருந்தனா்.