FOLLOW US

ON GOOGLE DISCOVER

வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

‘ஆடித் தவசு திருவிழா: தென்காசி மாவட்டத்துக்கு ஜூலை 28 உள்ளூா் விடுமுறை’

ஆடித் தவசு திருவிழாவையொட்டி, தென்காசி மாவட்டத்துக்கு இம்மாதம் 28ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

தென்காசி

Updated On :15 ஜூலை 2026, 2:28 am IST

ஆடித் தவசு திருவிழாவையொட்டி, தென்காசி மாவட்டத்துக்கு இம்மாதம் 28ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, இம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்றுவரும் முக்கியத் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அனைத்து மாநில அரசு அலுவலகங்ககள், நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்படுகிறது.

அன்றைய தினம் அரசுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

அவசரப் பணிகளைக் கவனிப்பதற்காக மாவட்ட கருவூலம், அனைத்து சாா்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படும்.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக. 1ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.