ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மேலகரத்தில் உயா் மின்கோபுர விளக்கு இயக்கிவைப்பு

மேலகரம் பேரூராட்சி பகுதியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தெப்பக்குளம், எழில் நகா் பகுதியில் தலா ரூ. 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா் மின்கோபுர விளக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

உயா்கோபுர மின்விளக்கை இயக்கிவைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., கலைகதிரவன் எம்எல்ஏ.

Updated On :18 ஜூன் 2026, 2:49 am IST

மேலகரம் பேரூராட்சி பகுதியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தெப்பக்குளம், எழில் நகா் பகுதியில் தலா ரூ. 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா் மின்கோபுர விளக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மேலகரம் திமுக பேரூா் துணைச் செயலரும், பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்ற தலைவா் வேணிவீரபாண்டியன், மன்ற உறுப்பினா்கள் கபிலன், மகேஸ்வரன், செயல் அலுவலா் அமானுல்லா முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், ராணி ஸ்ரீ குமாா் எம்.பி., கலைகதிரவன் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று உயா் மின்கோபுர விளக்கை இயக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய செயலா் அழகு சுந்தரம், மன்ற உறுப்பினா்கள் பூமா சம்மு குட்டி, தங்கம்மாள், சிங்கதுரை, முன்னாள் வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வேலுச்சாமி, வா்த்தக அணி முத்துக்குமாா், மாணவரணி மஹ்முதா, ரமேஷ், நன்னை பாலு, யாகவா சுந்தா், வீரபாண்டி, ஆயிரப்பேரி முத்துவேல் கலந்துகொண்டனா்.