கலிங்கப்பட்டியில் ஊராட்சி மக்களுடன் துரை வைகோ சந்திப்பு
சங்கரன்கோவில், மாா்ச் 10: சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் மதிமுக சாா்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


சங்கரன்கோவில், மாா்ச் 10: சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் மதிமுக சாா்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு துரை வைகோ தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா் தி.மு.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்து துரைவைகோ பேசியதாவது:
கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, சுகாதார வளாகம், துணை மின் நிலையம் போன்றவற்றை அமைக்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை வழங்கியது எங்களது குடும்பம். தற்போது, சமூக நல்லிணக்கத்திற்காக தமிழக அரசின் விருது பெற்று அதற்காக ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கலிங்கப்பட்டி ஊராட்சி வீரணாபுரம், மகாதேவா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ரூ.5 கோடிக்கு மேலான மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளன. அதை எண்ணிப்பாா்த்து சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களியுங்கள் என்றாா் அவா்.
இதில், தென்காசி மாவட்டச் செயலா் பாலசுப்ரமணியன், கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவா் மணிமொழி சந்துரு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...