அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நெல்லை மாவட்டத்தில் ஒரு வாரத்தில் சராசரியாக 142 மி.மீ. மழை பொழிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் சராசரியாக 142 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:45 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் சராசரியாக 142 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
புதன்கிழமை காலை நிலவரப்படி அணைகளுக்கு நீர்வரத்து (விநாடிக்கு): பாபநாசம், சேர்வலாறு  2,054.53 கனஅடி, மணிமுத்தாறு 1,457  கனஅடி, கடனாநதி 245 கனஅடி, ராமநதி 65 கனஅடி, கருப்பாநதி 98 கனஅடி, குண்டாறு 31 கனஅடி, அடவிநயினார் 46 கனஅடி, வடக்குப் பச்சையாறு 105 கனஅடி, நம்பியாறு  35 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 100 கனஅடி.
நீர்மட்டம்: பாபநாசம் அணை நீர்மட்டம் (3 அடி உயர்ந்து) 96.65 அடி,  சேர்வலாறு அணை (2 அடி உயர்ந்து) 109.61 அடி, மணிமுத்தாறு அணை (2 அடி உயர்ந்து) 75.80 அடி, கடனாநதி அணை (2 அடி உயர்ந்து) 74.20 அடி, ராமநதி அணை (ஓரடி உயர்ந்து) 65.50 அடி, கருப்பாநதி அணை (2 அடி உயர்ந்து) 66.28 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை 98 அடி, வடக்குப் பச்சையாறு அணை (4 அடி உயர்ந்து) 25 அடி, நம்பியாறு அணை  22.96 அடி, கொடுமுடியாறு அணை 52.50 அடி.
பாசனத்துக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து 304.75 கனஅடி,  கடனாநதி அணையிலிருந்து 60 கனஅடி, ராமநதி, குண்டாறு அணைகளிலிருந்து தலா 35 கனஅடி, அடவிநயினார் அணையிலிருந்து 70 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் நம்பியாறு அணைக்கு வந்துகொண்டிருந்த 35 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு வந்து கொண்டிருந்த 100 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
142 மி.மீ. மழை பதிவு: புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-41, பாபநாசம் கீழ் அணை-56, சேர்வலாறு அணை-37, மணிமுத்தாறு அணை-10.8, கடனாநதி அணை-5, ராமநதி அணை-30, கருப்பாநதி அணை-37, குண்டாறு அணை-28, அடவிநயினார் அணை-15, நம்பியாறு அணை-13, கொடுமுடியாறு அணை-5, கன்னடியன் அணைக்கட்டு-38.4,  திருநெல்வேலி-7.4, பாளையங்கோட்டை-9, நான்குனேரி-26, ராதாபுரம்-
22, சேரன்மகாதேவி-14.4, அம்பாசமுத்திரம்-47.8, ஆலங்குளம்-22.4, தென்காசி-15.8, செங்கோட்டை-26, ஆய்க்குடி-22, சங்கரன்கோவில்-42, சிவகிரி-29.
பருவ மழை தொடங்கிய பின்னர், நவ. 1 முதல் 7வரை இம்மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், பிற பகுதியிலும் சராசரியாக 142 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.