மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நரசிங்கநல்லூரில் திருவாசக முற்றோதுதல்

பேட்டை அருகேயுள்ள  நரசிங்கநல்லூர் அருள்மிகு குலசேகரமுடையார் சமேத விசாலாட்சி அம்பாள் கோயிலில், திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:36 am

பேட்டை அருகேயுள்ள  நரசிங்கநல்லூர் அருள்மிகு குலசேகரமுடையார் சமேத விசாலாட்சி அம்பாள் கோயிலில், திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
துர்கா அபிராமி திருவாசகம் முற்றோதுதல் குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குழுவின் செயலர் மு.கணேசன், மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சுவாமிக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பிடம் பெறவும், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. ஆனந்தகூத்தன் அறக்கட்டளை சார்பில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. தேசிகராணி, நிர்மலா, லலிதா, செல்வவள்ளி, முத்துமாலை, ஜானகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.