தியாகராஜநகர் கிளை நூலக வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் பொன்.வேலுமயில் தலைமை வகித்தார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.தியாகராஜன், தியாகராஜநகர் விக்ன விநாயகர் அறநெறிச் சங்கத் தலைவர் வே.வீரபத்தின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட இணைச் செயலர் இல.செந்தூர்நாதன் வரவேற்றார்.
செந்தமிழே செம்மொழியே என்ற தலைப்பில் 7ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீகலா, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் பண்டை தமிழர்களின் நாகரிகப் பண்புகள் என்ற தலைப்பில் கவிஞர் பொன்.வேலுமயில், புண்ணியம் எனும் உயிர் என்ற தலைப்பில் நெல்லை கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
இரா.நடராஜன், முத்துசாமி, பூவலிங்கம், பி.மாணிக்கம், ஆர்.போத்திராஜ், எஸ்.மாரியப்பன், டி.குருசாமி, என்.அனந்தராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். வாசகர் வட்டச் செயலரும், நூலகருமான இரா.சிவஞானசுந்தரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் தாயாரின் நினைவிடம்தான் எனக்குப் பிடித்த இடம்: ஏ. ஆர். ரஹ்மான்

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


