திருநெல்வேலி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த சாரண மாணவர்கள் களப்பயணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்றனர்.
சாரணர்களுக்கான 2018 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருது தேர்வு உற்றுநோக்குதல் களப்பயணமாக திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் சாரண அமைப்பில் உள்ள 246 மாணவர்கள், 171 மாணவிகள், 46 ஆசிரியர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றனர். திருநெல்வேலியில் இருந்து ரயில் மூலம் திருச்செந்தூர் சென்று அங்கிருந்து பேருந்துகள் மூலம் மணப்பாடு கிராமத்திற்கு சென்று வந்தனர். மாவட்ட சாரணிய ஆணையர் ஹெலினா, பயிற்சி ஆணையர் அதிர்ஷ்டராஜ், பொருளாளர் செல்வராஜ், டைட்டஸ் ஜான் போஸ்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட துணை ஆணையர் பால்வண்ணன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.