கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியதால், எவ்வித மாற்றமும் நிகழாது என்றார் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் அந்த ஆணையம் முன்பாக காயமடைந்தவர்கள் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளனர். கர்நாடகத்தில் ரஜினி நடித்த காலா படத்திற்கு தடை விதிக்கக் கூடாது. ரஜினி, கமல் உள்பட எந்த நடிகர் நடித்த படமாக இருந்தாலும் தடை செய்யக் கூடாது.
காவிரி பிரச்னை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்ததால் எந்த மாற்றமும் நிகழாது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட கர்நாடக அரசு காவிரியிலிருந்து தண்ணீர் வழங்கவில்லை. நீட் தேர்வில் தமிழகம் கடைசி இடம் பிடித்துள்ளது. இது மாணவர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.