4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஊராட்சி செயலர் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தென்காசி, செங்கோட்டை,  களக்காடு, பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்கள் தவிர, எஞ்சிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 34 ஊராட்சிகளில் காலியாக

Updated On :29 மார்ச் 2018, 2:00 am

தென்காசி, செங்கோட்டை,  களக்காடு, பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்கள் தவிர, எஞ்சிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 34 ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிப்பவராகவோ அல்லது அருகில் உள்ள ஊராட்சிகளில் வசிப்பவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பொதுப்பிரிவினர் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 வயது முதல் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். ஊராட்சி செயலர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தேவையான இதர தகுதிகள்,  ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களின் விவரம்,  இன சுழற்சி இடஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை ‌w‌w‌w.‌t‌i‌r‌u‌n‌e‌l‌v‌e‌l‌i.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தனி அலுவலர்களின் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.