கரம் யோகத்தான் மாரத்தான் போட்டியில், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றார்.
திருநெல்வேலி கோடகநல்லூரில் கரம் யோகத்தான் மாரத்தான் போட்டிகள், நான்கு பிரிவுகளாக நடைபெற்றன. இதில் மாணவர்களுக்கான 5 கி.மீ. தொலைவு போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் கலந்துகொண்டு இரண்டாமிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெள்ளிப் பதக்கமும், ரூ.2 ஆயிரமும் வழங்கி பாராட்டினார். மாணவரை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






