பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள்

Updated On :24 ஜனவரி 2019, 2:50 am IST

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா பாளையங்கோட்டையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.  
இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் திருநெல்வேலி மாநகர் மாவட்டத் தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் நேதாஜியின் படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். பின்னர், பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், தென்னங்கன்று ஆகியவை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் அரசு சார்பில் நேதாஜி சிலை அமைக்க வேண்டும்;  நேதாஜியின் பிறந்த தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், கட்சியின் மாவட்ட மாணவரணிச் செயலர் முத்துப்பாண்டியன், தொண்டரணிச் செயலர் மணிமாறன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் யாபேஸ் பாண்டியன்,  பகுதிச் செயலர் குமார் பாண்டியன், பகுதி இளைஞரணித் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
பாளையங்கோட்டை: 
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில்  நேதாஜியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து,  இந்தியாவின் பன்முகத் தன்மையைக் காக்கும் உறுதிமொழியேற்கப்பட்டது. 
நிகச்சிக்கு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு நிர்வாகி அ.பீட்டர் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட பொது நலசங்கத்தை சேர்ந்த பால் அண்ணாத்துரை, டேனியல், சீனிவாசன், சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.