/
பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், விவசாய செழிக்க வேண்டி சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன.
காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முருகன் திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









