கவிஞர் பிரமிள் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சனை திரைப்பட இயக்கம், பிரமிள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்' என்ற தலைப்பில் கவிஞர் பிரமிள் படைப்புகள் குறித்த கருத்தரங்கை சனிக்கிழமை நடத்தின. கருத்தரங்கிற்கு வைகை குமாரசாமி முன்னிலை வகித்தார்.
கவிஞர் பிரமிளின் விமர்சன கட்டுரைகள் குறித்து பாலா கருப்பசாமி, பேட்டிகள், உரையாடல்கள் குறித்து சுந்தர் காளி, கதைகள், நாடகங்கள் குறித்து ஆர்.ஆர். சீனிவாசன் ஆகியோர் பேசினர். எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், கவிஞர் பேரா, எழுத்தாளர் கிருஷி, சுப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








