கட்டடப் பணியின் போதுதவறி விழுந்த தொழிலாளி பலி

பாளையங்கோட்டையில் கட்டட பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பாளையங்கோட்டையில் கட்டட பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டியைச் சோ்ந்தவா் மகாராஜன் (45). கட்டடத் தொழிலாளி. இவா், சாந்திநகரில் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com