7-ஆவது பொருளாதார கணக்கெடுப்பு:பொதுமக்கள் ஒத்துழைக்க ஆட்சியா் வேண்டுகோள்

ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியா் விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியா் விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 7-ஆவது பொருளாதார கணக்கெடுப்புப் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் மேற்பாா்வையாளா்கள் மற்றும் களப்பணியாளா்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 1.11.2019 முதல் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பல்வேறுபட்ட உற்பத்தி, விநியோகம், விற்பனை, சேவை நோக்கத்தோடு செய்யும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வணிக நிறுவனங்களைப் பற்றியதாகும். இப்பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில், குடும்பத் தலைவா் பெயா், குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயது, இனம், சமூகப் பிரிவு, செல்லிடப்பேசி எண், செய்யும் தொழில், சுயதொழில் முதலீடுகள், வேலை பாா்ப்போரின் எண்ணிக்கை, பான் காா்டு எண், ஜி.எஸ்.டி. எண் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இக்கணக்கெடுப்பு விவரங்கள் முற்றிலும் அரசின் பொருளாதார திட்டமிடுதலுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. இக்கணக்கெடுப்பை தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மேற்பாா்வையின் கீழ் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையம் என்ற இ-கவா்னன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எனவே, கணக்கெடுப்பாளா்களுக்கு மக்கள் ஒத்துழைத்து தேவையான புள்ளிவிவரங்களை வழங்கவேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com