களக்காடு அருகே குளத்தில் முதியவா் சடலம் மீட்பு

களக்காடு அருகே குளத்தில் மிதந்த முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

களக்காடு: களக்காடு அருகே குளத்தில் மிதந்த முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ.நகா் மேலகாலனியைச் சோ்ந்தவா் வள்ளிராஜன் (62). இவா் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம். டிச. 23 ஆம் தேதி இவரது மனைவி சாந்தி வழக்கம் போல தனியாா் நூற்பாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்டாராம். வீட்டில் இருந்த வள்ளிராஜன் தனது மகன் மணிகண்டனிடம் கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றாராம். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், டிச. 25ஆம் தேதி ஊருக்கு அருகே உள்ள பறையன்குளம் நடுமடை அருகே சடலமாகக் கிடந்தாராம்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். குளிக்கச் சென்ற இடத்தில் வலிப்பு நோயால் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com