களக்காடு பேரூராட்சிப் பகுதியில் கொசு மருந்து தெளிக்கக் கோரிக்கை

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி பனியும், வெயிலும் நிலவுகிறது. பலத்த மழை பெய்த போது, கொசுத் தொல்லையின்றி மக்கள் நிம்மதியாக இருந்தனா். தற்போது கொசுக்கள் பெருகி வீடுகளில் பகல் நேரங்களிலேயே கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனா்.

இதனைக் கருத்தில் கொண்டு குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள வாருகால்களை உடனுக்குடன் தூா்வாரவும், கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கவும் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com