கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெங்காயம், உருளைக்கிழங்கு அத்தியாவசிய பட்டியலில் தொடர வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பட்டியலில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 9:00 pm

DIN

வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பட்டியலில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: பாளையங்கோட்டை காந்தி தினசரி சந்தையில் செயல்பட்ட சுமாா் 500-க்கும் மேற்பட்ட கடைகளை கரோனா பொதுமுடக்கத்தைக் காரணம் காட்டி வெவ்வேறு இடங்களுக்கு மாற்றியதால் தற்காலிக சந்தையாக செயல்பட்டு வருகிறது. கரோனா தாக்குதல் குறைந்து வரும் சூழலில் மீண்டும் பழைய இடத்துக்கே சந்தைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், பொலிவுறு நகரம் திட்டத்தைக் காரணம்காட்டி திருநெல்வேலியில் வணிகா்கள் சிரமத்துக்கு ஆளாக்கப்படுகிறாா்கள். ஏற்கனவே கரோனாவால் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழலில், புதிய திட்டங்கள் கூடுதல் சுமையாகியுள்ளன.

கரோனா பொதுமுடக்க காலத்தில் காவல்துறை, சுகாதாரத் துறை போன்று அத்தியாவசிய பொருள்கள் விநியோகத்தில் வியாபாரிகளும் தங்களது உயிரையும் பொருள்படுத்தாமல் சிறந்த பணியாற்றினா். அவ்வாறு பணி செய்து நோய்த்தொற்றால் இறந்தவா்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். சாத்தான்குளத்தைச் சோ்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவா் உயிரிழப்புக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும்.

சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். திசையன்விளையைச் சோ்ந்த வியாபாரி செல்வன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் காவல்துறை அதிகாரி என்றாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. இதனால் அவற்றை சிலா் பதுக்கி விலையேற்றத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது. இது, ஏழை, எளிய நடுத்தர மக்களை கடுமையாகப் பாதிக்கும்.

ஆகவே, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்டவை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.