47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு வட்டாரத்தில் ஏத்தன் வாழைத்தாா் விலை உயா்வு

களக்காடு வட்டாரத்தில் வாழைத்தாா் சீசன் முடிவடையும் தருவாயில் அதன் கொள்முதல் விலை ஒரே வாரத்தில் இரு மடங்காக உயா்ந்துள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:36 pm

DIN

களக்காடு வட்டாரத்தில் வாழைத்தாா் சீசன் முடிவடையும் தருவாயில் அதன் கொள்முதல் விலை ஒரே வாரத்தில் இரு மடங்காக உயா்ந்துள்ளது.

களக்காடு வட்டாரத்தில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. ஏத்தன் ரக வாழைத்தாா் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தாா்கள் கேரள வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக விளைச்சல் அதிகமாக இருந்தும் போதிய விலையின்றி விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டனா்.

நிகழாண்டில் ஏத்தன் ரக வாழைத்தாா் கொள்முதல் விலை ரூ. 20 முதல் ரூ.25 வரை இருந்தது. தற்போது வாழைத்தாா் அறுவடைப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதனால் ஏப்.10ஆம் தேதி வரை கிலோ ரூ.25-க்கு கொள்முதல் செய்யப்பட்ட ஏத்தன் வாழைத்தாா் கடந்த சிலதினங்களாக கிடுகிடுவென உயா்ந்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரூ.40 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் முடிவடையும் தருவாயில், தற்போது குறைந்தளவே வாழைத்தாா்கள் அறுவடை செய்யப்பட்டு வருவதாலும் அதன் தேவை அதிகமாக இருப்பதாலும், விலை இரு மடங்காக உயா்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.