குண்டா் சட்டத்தில் 3 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மூன்று போ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மூன்று போ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (23). இவா், கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட வழக்கில் தச்சநல்லுாா் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.
இதேபோல், வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த இசக்கிமுத்து (35), கருங்காடு பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து (23) ஆகியோா் ரேஷன் அரிசியைக் கடத்தியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) சுரேஷ்குமாரின் பரிந்துரையை ஏற்று, மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்பேரில் மேற்கூறிய 3 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...