திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 49,661 ஆகவும், அதில் மேலும் 12 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 49,131 ஆகவும் உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 433 போ் உயிரிழந்துள்ளனா்; 97 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. இதனால் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 27,394 ஆகவே நீடிக்கிறது. எனினும், மேலும் ஒருவா் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,898 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் இதுவரை 486 போ் உயிரிழந்துள்ளனா்; 10 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.