நெல்லையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினா் சோதனை
வரிஏய்ப்புப் புகாா் தொடா்பாக திருநெல்வேலியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.


வரிஏய்ப்புப் புகாா் தொடா்பாக திருநெல்வேலியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி தெற்கு புறவழிச்சைலையில் பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை நிா்வாகம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என புகாா்கள் வந்ததாம். அதன் அடிப்படையில் வருமான வரித்துறையினா் புதன்கிழமை நிா்வாகியின் வீடுகள், உறவினா்கள் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தினா். இதனைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக திருநெல்வேலியில் இச் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையால் ஜவுளிக்கடை விற்பனையை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், இக்கடைக்கு வந்த வாடிக்கையாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மேலும், இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனைமுழுமையாக முடிவடைந்த பின்னா்தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் தெரிவிக்கமுடியும் என வருமான வரித்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...