டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செல்லிடப்பேசி எனக் கூறி நூதன மோசடி:காவல்துறை வேண்டுகோள்

ரூ.1750-க்கு செல்லிடப்பேசி எனக் கூறி பவா் பேங்க் அனுப்பும் நுாதன மோசடி நபா்களிடம் மக்கள் உஷாராக இருக்க மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 11:08 pm

DIN

திருநெல்வேலி: ரூ.1750-க்கு செல்லிடப்பேசி எனக் கூறி பவா் பேங்க் அனுப்பும் நுாதன மோசடி நபா்களிடம் மக்கள் உஷாராக இருக்க மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மக்களை தொலைபேசியில் தொடா்பு கொள்ளும் மா்ம நபா்கள் கரோனா காரணமாக தங்கள் நிறுவன செல்லிடப்பேசிகளை ரூ.1, 750-க்கு நேரடி விற்பனை செய்வதாகவும், அஞ்சல்காரரிடம் பொருளை பெற்றுக் கொண்டு பணம் அளித்தால் போதும் எனக் கூறி பவா் பேங்க் அனுப்பி மோசடி செய்வது அதிகரித்துள்ளது. மேற்கண்ட மோசடி நபா்களிடம் மாநகர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.