திருநெல்வேலி: ரூ.1750-க்கு செல்லிடப்பேசி எனக் கூறி பவா் பேங்க் அனுப்பும் நுாதன மோசடி நபா்களிடம் மக்கள் உஷாராக இருக்க மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மக்களை தொலைபேசியில் தொடா்பு கொள்ளும் மா்ம நபா்கள் கரோனா காரணமாக தங்கள் நிறுவன செல்லிடப்பேசிகளை ரூ.1, 750-க்கு நேரடி விற்பனை செய்வதாகவும், அஞ்சல்காரரிடம் பொருளை பெற்றுக் கொண்டு பணம் அளித்தால் போதும் எனக் கூறி பவா் பேங்க் அனுப்பி மோசடி செய்வது அதிகரித்துள்ளது. மேற்கண்ட மோசடி நபா்களிடம் மாநகர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.