எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வீரவநல்லூா் பேரூராட்சியில் நேரடி வரி வசூலிப்பு

வீரவநல்லூா் பேரூராட்சியில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று வரி வசூல் நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:13 am

DIN

வீரவநல்லூா் பேரூராட்சியில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று வரி வசூல் நடைபெற்றது.

இப்பேரூராட்சியில் வீட்டு வரியை முழுமையாகவும், விரைவாகவும் வசூலிக்கும்வகையில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று வரி வசூலிக்க தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து துப்புரவு ஆய்வாளா் பிரபாகரன், ஊழியா்கள் வியாழக்கிழமை 15, 16ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட வண்டிமலைச்சி அம்மன் கோயில் 3, 4ஆம் தெருக்களில் கணினி, அச்சு இயந்திரங்களுடன் சென்று வரி வசூலித்தனா். அதன்படி, ஒரே நாளில் 125 எண்களுக்கு வரியாக ரூ. 55 ஆயிரம் வசூலானது.

நேரடி வரி வசூல் மூலம் மக்களுக்கு வீண் அலைச்சல், நேர விரயம் குறைவதாகவும், அனைவரும் வரி செலுத்துவதாகவும் தெரிவித்தனா்.

மேலும், பேரூராட்சிப் பகுதியில் பொதுசுகாதாரம், குடிநீா் விநியோகம் பாதிப்பு, தெருவிளக்குப் பராமரிப்பு உள்ளிட்ட குறைகள் குறித்து செயல் அலுவலருக்கு 78240 58168 என்ற எண்ணுக்கும், துப்புரவு ஆய்வாளருக்கு 9442 291281 என்ற எண்ணுக்கும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.