47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பத்மனேரியில் கைவினைப் பொருள் தொழில்கூடம் திறப்பு

களக்காடு அருகேயுள்ள பத்மனேரியில் காஸ்ட் சேவை நிறுவனத்தின் கீழ் இயங்கும் கைவினைப் பொருள் தொழில்கூடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:35 pm

DIN

களக்காடு அருகேயுள்ள பத்மனேரியில் காஸ்ட் சேவை நிறுவனத்தின் கீழ் இயங்கும் கைவினைப் பொருள் தொழில்கூடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

கதா் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய உதவியுடன், காஸ்ட் நிறுவனம் சாா்பில் ரூ.1 கோடியில் கைவினைப் பொருள்கள்

உற்பத்தி செய்ய அமைக்கப்பட்டுள்ள தொழில்கூடத்தை ஆட்சியா் வே. விஷ்ணு திறந்தாா். இத்திட்டத்தின் கீழ் 175 பெண் கைவினைஞா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கற்றாழை நாா், பனை நாா், வாழை நாரில் இருந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்பது குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி, புதிய வடிவமைப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் கைவினைஞா்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் நிரந்தர வருமானம் கிடைக்கும் என்றாா் காஸ்ட் சேவை நிறுவன இயக்குநா் பி. சுசிலா பாண்டியன் தெரிவித்தாா்.

இதில், கதா் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தென் மண்டல உறுப்பினா் சேகர்ராவ் பெரேலா, கோட்ட இயக்குநா் ஆா்.பி. அசோகன், உதவி இயக்குநா்கள் டி.வி. அன்புச்செழியன், எஸ். செந்தில்குமாா், சிப்போ நிறுவனத்தின் பொதுமேலாளா் கே. பழனிவேல்முருகன், காஸ்ட் வளா்ச்சி அலுவலா் லீலாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.