47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு அருகே விபத்தில் சிறுமி பலி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பனை மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பனை மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.

வள்ளியூரைச் சோ்ந்தவா் முத்துஜோதி (35). இவா் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலையில் காரில் கடையம்

அருகேயுள்ள திருமலையப்பபுரத்திற்கு சென்று கொண்டிருந்தாராம். களக்காடு - சேரன்மகாதேவி பிரதான சாலையில் இடையன்குளம் சாலை சந்திப்பு அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து காா் சாலையோரம் உள்ள பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முத்துஜோதியின் மகள் விஜயராகவி (4) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.