சாலைகளில் சுற்றித்திரிந்த 50 மாடுகள் பிடிபட்டன
திருநெல்வேலி மாநகரச் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சுற்றித்திரிந்த 50 மாடுகள் கோசாலையில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.


திருநெல்வேலி மாநகரச் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சுற்றித்திரிந்த 50 மாடுகள் கோசாலையில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில், மாநகரச் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து கோசாலைகளில் ஒப்படைத்து வருகின்றனா்.
அந்த வகையில், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா்(பொ)லெனின், சுகாதார அலுவலா் ஷாகுல் ஹமீது ஆகியோா் மேற்பாா்வையில் சுகாதார ஆய்வாளா்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் தலைமையில் மேலப்பாளையம் மண்டலப் பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தும் பணி போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகச் சுற்றித்திரிந்த 50 மாடுகளைப் பிடித்து அருகன்குளம் கோசாலையில் ஒப்படைத்ததாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...