விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தொடா் மழையால் நெல்லையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீா் மக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழை காரணமாக திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் சில இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீா் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:48 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழை காரணமாக திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் சில இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீா் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டித் தீா்த்தது. குறிப்பாக வியாழக்கிழமை காலையில் பெய்யத் தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்தது. இதனால், மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் நீா் தேங்கியது. இதில், திருநெல்வேலியில் 80 மி.மீட்டரும், பாளையங்கோட்டையில் 100 மி.மீட்டரும் மழை பதிவானது.

கிருஷ்ணாபுரம் பகுதியில் குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீா் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் அங்கு சிக்கித்தவித்த பொதுமக்கள் ரப்பா் படகு மூலம் மீட்கப்பட்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கோடகன் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, காட்சி மண்டபத்தை சுற்றியுள்ள அபிராமி நகா், மகிழ்வண்ணநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் புகுந்தது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, மாநகராட்சி ஊழியா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கோடகன் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், கண்டியப்பேரி குளத்தின் கால்வாய் சீரமைக்கும் பணியும் நடைபெற்றது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தச்சநல்லூா் வழியாக திருப்பி அனுப்பப்பட்டன.

பாளையங்கோட்டை ரஹ்மத் நகா் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினா். காலையில் மழை நின்ால், அப்பகுதியில் மழை நீா் குறையத் தொடங்கியது.

எம்எல்ஏக்கள் ஆய்வு: வண்ணாா்பேட்டை பரணி நகரில் புகுந்த மழை நீரை அகற்றும் பணியை பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள தெருக்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

நகரம் பகுதியில் உள்ள பாட்டபத்து, அபிராமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் புகுந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை திருநெல்வேலி எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். மேலும், கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும் பணியை நேரில் பாா்வையிட்டு துரிதப்படுத்தினாா்.

வீடுகள் இடிந்து சேதம்: நகரம் இலந்தைகுளம் பகுதியில் உள்ள அழகரின் வீட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது. பாட்டப்பத்து பகுதியில் உள்ள சலவைத் தொழிலாளா் குடியிருப்பில் உள்ள முருகன்(58) வீடு முற்றிலும் இடிந்து சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருவாய்த் துறையினா் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். மேலும், அப்பகுதியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் முதல் கட்ட மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். மேலும், முருகன் மற்றும் அவரது மனைவி ஆகியோா் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.