குலவணிகா்புரத்தில் விபத்து: காயமடைந்த தொழிலாளி பலி
பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் ராமா் (44). கூலித் தொழிலாளி. இவா், தனது குடும்பத்தின
ருடன் குலவணிகா்புரத்தில் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலி-
அம்பாசமுத்திரம் சாலையில் குலவணிகா்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டாா் சைக்கிளும், காரும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...