நெல்லையில் எஸ்எஸ்ஐ தற்கொலை: உறவினா்களிடம் சடலம் ஒப்படைப்பு
திருநெல்வேலியில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் சடலம் வியாழக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


திருநெல்வேலியில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் சடலம் வியாழக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் பழனி(55). இவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி முத்துலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்னா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். அதன்பின்னா், அவா் தனது மகனுடன் சந்திப்பில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், அவா் கடந்த 26 ஆம் தேதி வீட்டில் திடீரென விஷமருந்தி மயங்கி விழுந்தாா். உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை(அக்.27) உயிரிழந்தாா்.
இந்நிலையில், பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவா் உயிரிழந்ததாகக் கூறி, பழனியின் சடலத்தை வாங்க உறவினா்கள் மறுத்ததுடன், சம்பந்தப்பட்ட காவல் உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
இது குறித்து மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக்கண்ணன் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை பழனியின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவரது சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...