/

தேவா் ஜெயந்திஅதிமுக மாவட்ட செயலா் அறிக்கை

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவினா் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:29 pm

DIN

முத்துராமலிங்க தேவரின் 114-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவினா் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியது: முத்துராமலிங்கத் தேவரின் 114-ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

நிகழ்சியில் கட்சியினா் அனைவரும் அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.