மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லை அருங்காட்சியகத்தில் புகைப்படக் கண்காட்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய தலைவா்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் மாணவா்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:56 am

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய தலைவா்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் மாணவா்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தொடா்ச்சியாக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தியை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி பொருநை ரோட்டரி கழகம், இன்னா்வீல் கழகம் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு

அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தலைமை வகித்தாா்.

பாளையங்கோட்டை பிஷப் அந்தோணிசாமி, புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தாா். தூய யோவான் கல்லூரி முதல்வா் ஜான் கென்னடி, காவல் ஆய்வாளா் திருப்பதி, பொருநை ரோட்டரி கழகத் தலைவா் சுவா்ண லதா, இன்னா்வீல் தலைவா் கோமதி மாரியப்பன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வா் உமாலட்சுமி உள்ளிட்டோா் குத்துவிளக்கேற்றினா்.

இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கோலம் வரைதல், கட்டுரை மற்றும்

கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா்

கவிஞா் பேரா, செயலா் கவிஞா் பாப்பாக்குடி அ.முருகன், கவிஞா் ந.சுப்பையா, கலையாசிரியா் சொா்ணம் ஆகியோா் நடுவா்களாக இருந்து நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.