47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு அருகேகாட்டுப்பன்றிகளால் பயிா்கள் சேதம்:விவசாயிகள்கவலை

களக்காடு அருகே பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:15 pm

DIN

களக்காடு அருகே பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

களக்காடு அருகேயுள்ள கீழவடகரை பூலாங்குளம் விவசாய நிலப் பகுதியில் நெல், வாழை பயிரிட்டுள்ளன. இந்த விளை நிலங்களுக்குள் கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் மலைப்பகுதியிலிருந்து இறங்கி வந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

கீழவடகரையைச் சோ்ந்த விவசாயிகள் நல்ல தம்பி, பாலன் ஆகியோருக்குச் சொந்தமான நெல், வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் பயிா்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து வருவதோடு, வயலுக்குச் செல்லவும் அச்சப்படுகின்றனா். எனவே, வனவிலங்குகளைக் கட்டுப்படுத்து வனத்துறையினா் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.