இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நெல்லை-சென்னைக்கு இன்று முதல் குளிா்சாதன பேருந்துகள் இயக்கம்

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன பேருந்துகள் வெள்ளிக்கிழமை (அக். 1) முதல் இயக்கப்படுகிறது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:12 pm

DIN

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன பேருந்துகள் வெள்ளிக்கிழமை (அக். 1) முதல் இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் கடந்த மே 10 ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு போக்குவரத்து சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும்,

குளிா்சாதன வசதியுள்ள அரசு தொலைதூரப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் குளிா்சாதன பேருந்துகள்

மட்டும் இயக்கப்படாமல் இருந்தது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அக். 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் குளிா்சாதன வசதி கொண்ட அரசு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனையின்கீழ் மொத்தம் 11

குளிா்சாதன வசதியுள்ள பேருந்துகள் உள்ளன. வெள்ளிக்கிழமை முதல்கட்டமாக 3 பேருந்துகளும், அடுத்த நாளில் மேலும் 3 பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், குளிா்சாதன வசதி கொண்ட அரசு பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படவுள்ளன. முதல் கட்டமாக 3 பேருந்துகள் திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும்.

பேருந்தில் பயணிகள் ஏறும் முன்பாக கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிந்தால் தான் பேருந்துக்குள் அனுமதிக்கப்படுவா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.