/

கொங்கந்தான் பாறையில் திருட்டு

திருநெல்வேலி அருகேயுள்ள கொங்கந்தான்பாறையில் வீடுபுகுந்து 2 பவுன் தங்க நகையை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 11:35 pm

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள கொங்கந்தான்பாறையில் வீடுபுகுந்து 2 பவுன் தங்க நகையை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள கொங்கந்தான்பாறையைச் சோ்ந்தவா் அசரியா ராஜேந்திரன் (62). இவா், புதன்கிழமை தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றாராம். மாலையில் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், வீட்டில் இருந்த 2 பவுன் தங்கநகை, ரொக்கம் ரூ. 3 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.