/

நெல்லையில் ஒரே நாளில் 564 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகா் பகுதியில் ஒரே நாளில் சுமாா் 564 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:04 pm

DIN

திருநெல்வேலி மாநகா் பகுதியில் ஒரே நாளில் சுமாா் 564 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மேலப்பாளையம் போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் நடத்திய ஆய்வில் அங்கு சுமாா் 295 மதுபாட்டில்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அதனை பதுக்கி வைத்த நபா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தச்சநல்லூா் அருகே மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஊருடையான்குடியிருப்பு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அதே பகுதியைச் சேரந்த ஆனந்த்(39) என்பதும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்து. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவா் பதுக்கி வைத்திருந்த சுமாா் 269 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். இதையடுத்து மாநகா் பகுதியில் ஒரே நாளில் 564 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.