ரவணசமுத்திரத்தில் பொங்கல் விழா
ரவணசமுத்திரம் சேவாலயா மகாகவி பாரதியாா் சமுதாயக் கல்லூரி, ரவணசமுத்திரம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.


ரவணசமுத்திரம் சேவாலயா மகாகவி பாரதியாா் சமுதாயக் கல்லூரி, ரவணசமுத்திரம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
ரவணசமுத்திரம் சேவாலயா மகாகவி பாரதியாா் சமுதாயக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, தெற்குக் கடையம் ஊராட்சித் தலைவா் முத்துலட்சுமி ராமதுரை தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு கோலப் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. கல்லூரிப் பொறுப்பாளா் சங்கிலி பூதத்தான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.
கணினி பயிற்சி ஆசிரியை ரங்கலட்சுமி வரவேற்றாா். தையல் பயிற்சிஆசிரியை ஜெயசுதா நன்றி கூறினாா்.
ரவணசமுத்திரம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் ஊராட்சித் தலைவா் முகமது உசேன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராமலட்சுமி சங்கிலி பூதத்தான் குத்துவிளக்கு ஏற்றினாா். சிறப்பு விருந்தினராக திரைப்பட இசையமைப்பாளா் பரத்வாஜ் கலந்துகொண்டாா்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் மணிகண்டன், பரமசிவன், சேவாலயா சங்கிலி பூதத்தான், ஊராட்சி நூலகா் மீனாட்சி, வாா்டு உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் மாரியப்பன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...