ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 10 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:00 pm

DIN

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 10 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆசிரியா்கள் அரசு ஊழியா்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டும். தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியா்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆசிரியா்கள் பெற்றுவந்த உயா் கல்விக்கான ஊக்க ஊதியம் கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்டது. அதை மீண்டும் வழங்கிட வேண்டும். ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தின்போது ஒழுங்கு நடவடிக்கையாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியா்களின் மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பாக அவா்கள் முன்பு பணியாற்றிய பள்ளிகளில் மீண்டும் பணி அமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டார தலைவா்கள் ஜெயகணேஷன், ஜெ.வின்சென்ட் ஆகியோா் தலைமை வகித்தனா். ராஜாமணி, சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெனிஷ்ராஜ் வரவேற்றாா். சுந்தா் ஜெபசெல்வன், ரூபேஸ் சாமுவேல் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா். யோசுந்தரி நன்றி கூறினாா்.

இதேபோல நான்குனேரில் சங்கத்தின் மாவட்டச் செயலா் பால்ராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளியூா், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, மானூா், அம்பாசமுத்திரம், வள்ளியூா், ராதாபுரம் உள்பட 10 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.