தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கல்குவாரி விபத்தில் இறந்தோா் குடும்பத்துக்கு அண்ணாமலை ஆறுதல்

நான்குனேரி அருகே கல்குவாரி விபத்தில் இறந்த தொழிலாளா்கள் ளின் குடும்பங்களை மாநில பாஜக தலைவா் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:41 pm

DIN

நான்குனேரி அருகே கல்குவாரி விபத்தில் இறந்த தொழிலாளா்கள் ளின் குடும்பங்களை மாநில பாஜக தலைவா் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அடை மிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் காக்கைகுளம் செல்வகுமாா், இளையாா் குளம் செல்வம், ஆயன்குளம் முருகன், உடையான் குடியிருப்பு ராஜேந்திரன் ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்நிலையில், செட்டிகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த, மாநில பாஜக தலைவா் அண்ணாமலை, இளையாா்குளம் பாலா் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கல்குவாரி விபத்தில் இறந்தவா்களின் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

தொடந்து அங்கு வந்திருந்த இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினாா். பின்னா் லெப்பை குடியிருப்பு கிராமத்துக்குச் சென்று, காரில் மூச்சு திணறி உயிரிழந்த நித்திஸ், நிகிஷா, கபிஷாந்த் ஆகிய குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

அப்போது, திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.