கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நெல்லையில் ஸ்ட்ரெச்சருடன் பொதுத் தேர்வை எழுதிய மாணவன்

நெல்லையில் விபத்து ஏற்பட்டு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஸ்ட்ரக்ச்சருடன் வந்து பிளஸ் 2 பொதுத் தேர்வை பள்ளி மாணவன் எழுதினான்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:17 am

DIN

திருநெல்வேலி: நெல்லையில் விபத்து ஏற்பட்டு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஸ்ட்ரக்ச்சருடன் வந்து பிளஸ் 2 பொதுத் தேர்வை பள்ளி மாணவன் எழுதினான்.

நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த அசாருதீன் என்ற மாணவன், அதே பகுதியில் இயங்கிவரும் காமராஜ் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். தற்போது அவருக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் திடீரென மாணவன் அசாருதீன் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். 

அங்கு அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இன்று கணித தேர்வு நடைபெற்றது. எப்படியாவது தேர்வை எழுதிவிட வேண்டும் என்று ஆர்வமுடன் இருந்தான். 

இதையடுத்து மாணவனின் பெற்றோர்கள் மருத்துவரின் அனுமதியோடு அசாருதீனை ஆம்புலன்சில் தேர்வு நடைபெறும் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஸ்ட்ரக்ச்சரில் இருந்தபடி மாணவன் அசாரூதின் ஆசிரியர் உதவியோடு பொதுத் தேர்வை எழுதினார். 

இவ்விபத்தில் சிக்கிய போதும் தன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு என்பதால் அசாரூதின் தேர்வில் கலந்து கொண்டது சக மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.